கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பது ஒரு பழமொழி. இதன் பொருள்:
மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதாகும். இந்த பழமொழி மனிதர்கள் ஒத்த மனதுடன், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. சமூக ஒற்றுமை, பரஸ்பர உதவி, இணக்கம் ஆகியவற்றின் தேவையை இது விளக்கும்.
எடுத்துக்காட்டாக, குடும்பம், பணிபுரியும் சூழல், அல்லது சமுதாயம் போன்ற இடங்களில் ஒருமித்த மனப்பான்மையுடன் செயல்பட்டால், அது வெற்றிக்கும் நன்மைக்கும், வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். இந்த மனப்பான்மை, சமுதாயத்தையும் முன்னேற்றும்.
இன்றைய மனித சமுதாயம் என்பது ஒற்றுமையின் அடிப்படையில் உருவானது. ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் தனித்தனி பயணத்தில் சென்றுகொண்டு இருந்தாலும், அனைவரும் ஒன்றுபடும்போது மட்டுமே பெரிய வெற்றிகளை பெறமுடியும். இதைத்தான் தமிழரின் முதுமொழி "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" எனும் சொற்றொடர் மிக தெளிவாக கூறுகின்றது.
ஒரு குடும்பத்தில், அனைவரும் நல்ல புரிந்துணர்வோடு வாழ்ந்தால் அக்குடும்பம் மகிழ்ச்சியின் மறுவடிவமாகும். அவ்வாறே, ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், அக்கிராமம் வளர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும். ஒத்த எண்ணங்கள், ஒருங்கிணைந்த செயல்கள், பிறருக்கு உதவும் மனப்பான்மை – இவை அனைத்தும் ஒன்று சேரும் போது மட்டுமே சமூக வளர்ச்சி சாத்தியமாகும்.
நாம் அனுதினம் சந்திக்கும் இன்னல்கள், இடையூறுகள், ஒற்றுமையாக இருந்தால் எளிதில் தீர்க்கப்படலாம். ஒற்றுமையற்ற இடத்தில் சிறுசிறு பிரச்சனைகளும் வலுத்து பெரிதாகி, பெரிய வீழ்ச்சிக்கே கொண்டுசெல்லும் சூழல் உருவாகும். எனவே தான் பண்டைய அறிவார்ந்த தமிழ் மூதாதையர்கள் , “ஒற்றுமையே வாழ்க்கையின் அடித்தளம்” என்றனர்.
வரலாற்றின் வழித்தடம் எங்கிலும், ஒற்றுமையுடன் போராடி வெற்றிபெற்ற போராட்டங்கள் பல உள்ளன. இந்திய விடுதலைப் போராட்டம், தமிழ் கலாசார மரபுகளை பேணிகாப்பதற்கான இயக்கங்கள் – அனைத்தும் கூட்டுப்பணியின் மிக பெரும் உதாரணங்கள்.
நாம் அனைவரும் மனம் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக செயல்பட்டால், எவ்வளவு பெரிய இலக்காயினும் அவைகள் எட்டக்கூடியவைகளே. ஆதலால் நாம் அனைவரும் ஒற்றுமையோடு, பரஸ்பரபுரிந்துணர்வோடு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும், இயற்கையை பேணிக்காத்து, பிறஉயிர்க்கும் தீங்குசெய்யாமல் வாழ்ந்தால் நிச்சயம் “கோடி நன்மை” நம்மை தேடி வரும்.
உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.

Comments
Post a Comment